• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

த.வெ.க மாநாடு: விஜய் கட்சி மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு கட்அவுட் ஏன்?

Byadmin

Oct 27, 2024


மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், TVK IT WING/X

படக்குறிப்பு, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இந்த கட்-அவுட்கள் விஜயின் கொள்கைகளை ஓரளவு தெளிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இன்னும் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு கட்-அவுட்டுக்கும் நோக்கம் இருக்கிறது, அதைத் தங்கள் கட்சியின் தலைவர் கூறினால்தான் அந்நோக்கம் நிறைவேறும் என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்-அவுட்கள் குறித்துப் பரவலாக பேசப்படுவது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை.

By admin