• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

‘நடன புயல்’ பிரபுதேவா நடிக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பட அப்டேட்

Byadmin

Oct 27, 2024


நடன இயக்குநரும் முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா ‘ எனும் திரைப்படத்தில் இடம்பிடித்த புதிய பாடலையும் பாடலுக்கான காணொளியையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, மடோனோ செபாஸ்டியன், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் , நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ட்ரான்ஸ் மீடியா & என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘போலீஸ்காரன கட்டிக் கிட்டா’ எனத் தொடங்கும் பாடலும் ,பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இந்தப் பாடலை எழுத, பின்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா பாடியிருக்கிறார்.

துள்ளல் இசையாக உருவாகி இருக்கும் இந்த பாடலில் இடம்பெறும் வரிகளும், நடிகர், நடிகைகளின் நடன அசைவுகளும் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

இதன் காரணமாக இந்த பாடல் இணையத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் யார் ? என்பது குறித்த சர்ச்சை இணையத்தில் எழுந்திருக்கிறது என்பதும், இந்தப் பாடலை பாடலாசிரியரும் ,கவிஞருமான ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதியிருப்பதாகவும்  ஆனால் இந்தப் பாடலை விளம்பரப்படுத்தும் போது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் எழுதி இருப்பதாகவும் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin