• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

நமக்கு வலியே தெரியாமல் ‘அட்டைகள்’ ரத்தம் உறிஞ்சுவது எப்படி? 4 கேள்வி – பதில்கள்

Byadmin

Mar 8, 2026


அட்டைகள் நம் ரத்தத்தை குடிக்கும்போது வலியே தெரியாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஆங்காங்கே தொகுப்புகளாக சோலைக் காடுகள், திரும்பிய திசையெங்கும் புல்வெளிக் காடு என ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உச்சியில் பல்லுயிர்ச்சூழல் பரந்து விரிந்திருந்தது.

திரும்பிய திசையெங்கும் காணப்பட்ட ஊசிப் புல், கருணைக் கீரை, பட்டைப் புல் போன்ற பல்வகையான புற்களை மேய்ந்துகொண்டு, மெத்தென்ற புல் மெத்தையில் காட்டு மாடு கூட்டம் ஒன்று சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தன.

அவற்றை ரசித்துக்கொண்டே மலையேறிக் கொண்டிருந்த நேரத்தில், மழைக் காடுகளில் பொதுவாகக் காணப்படும் அந்த உயிரினத்தைக் கண்டேன்.

நாங்கள் கடந்து சென்ற பாதையில் எங்கும் காண முடிந்த அட்டைகள், அமைதியாக எங்கள் கால் பூட்ஸ்களுக்குள் ஏறிக்கொண்டு ரத்தம் குடித்துக் கொண்டிருந்தன.

கால்சட்டையை மேலே தூக்கியதும் சாக்ஸுக்கு மேலே இரண்டு அட்டைகள் ஒரே இடத்தில் அருகருகே ஒட்டிக் கொண்டிருந்தன. எவ்வளவு நேரமாக என் ரத்தத்தைப் குடித்துக் கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

By admin