• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

நமான்ஷ் ஸ்யால்: துபையில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தை ஓட்டிய விமானியின் பின்னணி

Byadmin

Nov 22, 2025


துபையில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தின் பைலட் யார்?

பட மூலாதாரம், @Suryakiran_IAF

துபையில் நடந்த விமானக் கண்காட்சியின்போது இந்திய போர் விமானமான தேஜஸ் கீழே விழுந்து நொறுங்கியதில் விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.

இந்த விபத்து துபையின் அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி அளவில் நேர்ந்தது. இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தேஜஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

விமானி நமான்ஷ் ஸ்யால் இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நமான்ஷின் புகைப்படத்தை இணைத்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு. அதில், “துபை விமானக் கண்காட்சியில் நடந்த தேஜஸ் விமான விபத்தில், இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த நமான்ஷ் ஸ்யாலின் மரணச் செய்தி சோகமானதாகவும், மனதை நொறுக்குவதாகவும் அமைந்திருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

“நம் நாடு தைரியம் மிக்க, அர்ப்பணிப்பு நிறைந்த, துணிச்சலான ஒரு விமானியை இழந்துவிட்டது. துயரில் வாடும் அவரது குடும்பத்துக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்யால் அவர்களின் அடங்காத வீரம், அர்ப்பணிப்பு மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

By admin