இதமான மனதுக்கு
இனிமையான பொழுதாக
ஒவ்வொரு நொடியும்
அமைந்து விடுமானால்.
அமைதியான ஆறு
அதுபோல் ஓடும் வாழ்வு.
மகிழ்வெனும் ஓடம்
தளம்பாது பயணிக்க.
இயல்பாய் அமையாது
இந்த விடயம் என்றால்;
அதனை நாமாக நமக்கு
அமைத்துக் கொள்ளவோம்.
உறுதியோடு நிதானமாக
நின்று கொண்டால்
நம்மை நாம் புரிந்து
ஆசைக்கு எல்லையிட்டால்
தேவைக்கு சிறிது
பேராசைக்கு அதிகம் – நாம்
முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கை வாழ்து விட.
இருப்பது கொஞ்சம்.
கெடுப்பதை விட – அதை
பெருக்குவது மேல்.
அதிகம் என்றாலும் தான்.
புரிவாயோ என்னை
எந்தன் மனமே!
நதுநசி
The post நம்மை நாம் புரிந்து | நதுநசி appeared first on Vanakkam London.