சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நவ.13-ம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படஉள்ளன. அனைத்து மாவட்டச்செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.