
திருச்சி: டெல்லியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.