• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

நாமக்கல்: சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா? நீதிமன்றத் தீர்ப்பால் யாருக்கு சிக்கல்?

Byadmin

Mar 7, 2025


நாமக்கல்: சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா? நீதிமன்றத் தீர்ப்பால் யாருக்கு சிக்கல்?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)

‘கோவில்களுக்கு எந்த சாதியும் உரிமை கோர முடியாது’ என கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொன் காளியம்மன் கோவில் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கொங்கு வேளாளர் சமூக மக்கள் தொடர்ந்த வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் ஏற்கெனவே அனுமதியைப் பெற்ற சாதியினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறநிலையத்துறை கூறுகிறது.

நாமக்கல் மாவட்டம், பொன் காளியம்மன் கோவில் வழக்கில் என்ன நடந்தது? அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?

By admin