• Sat. Dec 6th, 2025

24×7 Live News

Apdin News

நாய் மீது மனிதர்கள் அன்பு செலுத்துவது ஏன்? அறிவியல் விளக்கம்

Byadmin

Dec 6, 2025


நாய் - மனிதன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாய்கள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்குகள் என்று நம்பப்படுகிறது.

நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம், ஆனால் சிவாவா (Chihuahua) உட்பட அனைத்து நாய்களும் ஓநாய்களின் வழித்தோன்றல்கள் ஆகும்.

அவற்றின் பழங்கால மூதாதையர்கள் இப்போது அழிந்துவிட்டனர். அவற்றின் மிக நெருங்கிய உயிருள்ள உறவினராகச் சாம்பல் நிற ஓநாய் உள்ளது. அது இன்றும் காடுகளில் அலைந்து திரியும் ஒரு சக்திவாய்ந்த வேட்டையாடும் விலங்கு.

ஆனால் ஓநாய்கள் எப்போது நம்முடன் மிக நெருக்கமாக வாழத் தொடங்கின? உலகம் முழுவதும் இத்தனை மக்களால் நாய்கள் ஏன் நேசிக்கப்படுகின்றன?

நாய்கள் மனிதர்களுடன் பழகத் தொடங்கியது எப்படி?

நாய் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு என்று நம்பப்படுகிறது.

2017ஆம் ஆண்டில், பழங்கால நாய் டி.என்.ஏ. பற்றிய ஒரு ஆய்வு, அவை 20,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஒரே இடத்தில் ஓநாய்களில் இருந்து பரிணாமம் அடைந்திருக்கலாம் என்று கண்டறிந்தது. முன்னர், நாய்கள் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியில் வாழ்ந்த இரண்டு ஓநாய் கூட்டங்களில் இருந்து பழக்கப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.

By admin