6
நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விநியோக ஒழுங்குமுறையில் மாற்றம் செய்து, நாளைய தினம் (01) அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்றும் (31) நாளையும் (01) ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளாக அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வழக்கமாக ஒற்றை எண் பதிவு இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்படும் எரிபொருள் விநியோகம், நாளைய தினத்தில் இரட்டை இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார விளக்கமளித்துள்ளார்.
இந்த தற்காலிக மாற்றம் மூலம் பொதுமக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதோடு, எரிபொருள் நிலையங்களில் காணப்படும் நெரிசலை குறைக்கும் நோக்கமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தேவையற்ற வகையில் திரள்களைத் தவிர்த்து ஒழுங்குடன் எரிபொருள் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.