• Thu. May 1st, 2025

24×7 Live News

Apdin News

நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏஐ விளம்பரம்: ஆன்லைன் மோசடியில் ரூ.33 லட்சம் இழந்த காங்கிரஸ் மாநில நிர்வாகி

Byadmin

May 1, 2025


ஆன்லைன் மோசடி

பட மூலாதாரம், Getty Images

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்று வந்த போலி வீடியோ வெளியிடப்பட்ட முகநுால் பக்கத்தில் வந்த ‘லிங்க்’கில் இணைந்து, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.33 லட்சத்தை இழந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி. அதிநவீன பயிற்சியும் ஆங்கில அறிவும் கொண்ட இளைஞர்களைக் கொண்டு இந்த மோசடி நடப்பதால், நன்கு படித்த, ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களே இதில் ஏமாறுவதாகக் கூறுகிறார் அவர்.

அவர் செலுத்திய தொகையில் 15 லட்ச ரூபாய் தொகையை முடக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள சைபர் கிரைம் போலீசார், இதை இயக்குபவர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதால் அவற்றை மீட்பதற்கு வாய்ப்பிருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் லாரன்ஸ் டொமினிக் சேவியர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், 2 பேக்கரிகளையும் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் குன்னுார் முன்னாள் நகர செயலாளராக இருந்த அவர், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார்.

இவர்தான் முகநுால் பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அதில் வந்த ‘லிங்க்’கில் தொடர்புகொண்டு, அதில் கூறியபடி அடுத்தடுத்து பணத்தைச் செலுத்தி இறுதியில் ரூ.33 லட்சத்து 10,472 வரை செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். இதுதொடர்பாக இவர் கொடுத்துள்ள புகாரின்பேரில், பிஎன்எஸ் 318 (ஏமாற்றுதல்) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, உதகை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் பிரவீணா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin