• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

நிலவில் மோதிய ராக்கெட் பகுதி – விஞ்ஞானிகளுக்கு ஏன் ஒரு ‘பரிசாக’ கருதப்படுகிறது?

Byadmin

Aug 6, 2026


ஒரு ராக்கெட்டின் பாகம் தற்செயலாக சந்திரனுடன் மோதியது கடைசியாக 2022 ஆம் ஆண்டில்தான் உறுதிப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாடின்றி விண்வெளியில் பயணித்த ராக்கெட் பகுதி ஒன்று நிலவில் மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த மோதலால், நிலவில் உள்ள பிரபலமான ஐன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகே புதிய பள்ளம் உருவாகியிருக்கலாம். இதனால் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவக்கூடிய தனித்துவமான ஆய்வு வாய்ப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளது.

ஃபால்கன் 9 ராக்கெட்டின் காலியான மேல் பகுதி, புதன்கிழமை மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில் நிலவைத் தாக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

இந்த மோதலால் உருவான குறுகிய நேர ஒளிர்வை, உயர்தர தொலைநோக்கிகள் இருந்தாலும் தொழில்முறை அல்லாத வானியலாளர்கள் கண்டறிவது கடினமாக இருந்திருக்கும். இருப்பினும், அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பெரிய வானியல் ஆய்வு மையங்கள் இந்த நிகழ்விலிருந்து கிடைத்த தகவல்களை தற்போது ஆய்வு செய்து வருகின்றன.

இந்த மோதலின் முழுமையான விளைவுகள் என்ன, அதிலிருந்து என்னென்ன அறிவியல் தகவல்களைப் பெற முடியும் என்பதைக் கண்டறிய இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

ஆனால், கோள்களின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் புவியியல் விஞ்ஞானிகளுக்கு, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த மோதல் ஓர் அறிவியல் பரிசாக அமைந்துள்ளது

By admin