• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

நிஷாந்த் உயிர்த்தநாதன்: நடுக்கடலில் கப்பல் சிக்கிக்கொள்பவர்கள் உயிர்பிழைக்க என்ன செய்வார்கள்?

Byadmin

Jun 15, 2026


கப்பல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டால் மாலுமிகள் தப்பிப் பிழைக்க என்ன செய்வார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இப்படியாக, மோதல்கள், போர்கள் வெடிக்கும்போது, எல்லைகளில் நெருக்கடிச் சூழல் நிலவும்போது, அதன் தாக்கத்தை உலகம் பொதுவாக கரையிலுள்ள மக்கள் மீதுதான் அதிகமாக உணர்கிறது.

ஆனால், நகரங்கள் மற்றும் போர்க்களங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், கடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் மாலுமிகளும் இந்த நெருக்கடிகளின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் சந்திக்கும் சவால்கள் வேறுவிதமானவையாக இருக்கின்றன.

அப்படி முடிவற்ற நீரால் சூழப்பட்டு, பிரமாண்டமான கப்பல்களுக்குள் சிக்கியிருக்கும் மாலுமிகள், வீடு திரும்புவதற்கான பாதுகாப்பான வழியை நாடிக் காத்திருப்பர்.

சமீபத்திய இரான் தொடர்பான கடல்சார் நெருக்கடியால், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, பாரசீக வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கப்பல்களில் பல மாலுமிகள் சிக்கித் தவித்தனர்.

By admin