• Sun. Nov 16th, 2025

24×7 Live News

Apdin News

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | TN govt files case in Supreme Court against President decision

Byadmin

Nov 16, 2025


புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் வழக்​கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்​கல் செய்​துள்ள மனு​வில், நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் நடவடிக்கை சட்​ட​விரோத​மானது.

குடியரசுத் தலை​வரது இந்த நடவடிக்​கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளித்​த​தாக அறிவிக்க வேண்​டும் அல்​லது நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கும் வகை​யில் மீண்​டும் குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநரின் செயலர் மற்​றும் மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என கோரப்​பட்​டுள்ளது.



By admin