• Thu. Dec 4th, 2025

24×7 Live News

Apdin News

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த முக்கிய தீர்ப்புகளும் எழுந்த சர்ச்சைகளும்

Byadmin

Dec 4, 2025


திருப்பரங்குன்றம், மதுரை, ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி

பட மூலாதாரம், hcmadras.tn.gov.in

“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது” என்று டிசம்பர் 4 அன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

முன்னதாக, “தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களுடன் மனுதாரர் உள்பட 10 பேர் சென்று நிறைவேற்றலாம்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

“தீபத்தை ஏற்றுவதற்கு மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை” எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராம ரவிக்குமார் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

“திருப்பரங்குன்றத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முன்வைத்துள்ளன.

யார் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன்? அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் மற்றும் பேச்சுகளில் எழுந்த சர்ச்சைகள் என்ன?

By admin