• Sun. May 25th, 2025

24×7 Live News

Apdin News

நீலகிரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை ஊட்டி வந்தது | Heavy rain warning for the next 2 days in the Nilgiris

Byadmin

May 25, 2025


ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​துக்கு இன்​றும்,நாளை​யும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தால், பாது​காப்பு ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அரபிக் கடலில் ஏற்​பட்​டுள்ள காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் காரண​மாக நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் அடுத்த 2 நாட்​கள் அதி கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்​ளது. அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு முதல் நீல​கிரி மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் சூறாவளிக்​காற்​றுடன் கூடிய கனமழை பெய்து வரு​கிறது. இதையொட்​டி, மாவட்ட நிர்​வாகம் பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

மாவட்​டத்​தில் 456 நிவாரண முகாம்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அபாயகர​மான பகு​தி​களாக கண்​டறியப்​பட்​டுள்ள 283 இடங்​களில் கண்​காணிப்​புப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அனைத்து அரசு அதி​காரி​களை​யும் உஷார் நிலை​யில் இருக்​கு​மாறு மாவட்ட நிர்வாகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மேலும், பாதிப்பு குறித்து மக்​கள் உடனுக்​குடன் தெரிவிக்க தொலைபேசி எண்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

மாவட்​டம் முழு​வதும் 3,500 முதல்​நிலை பொறுப்​பாளர்​களுக்கு பயிற்சி வழங்​கப்​பட்​டு, தயார் நிலை​யில் உள்​ளனர். ஆப்​தமித்ரா திட்​டத்​தின் கீழ் பயிற்​சிபெற்ற 197 பேரிடர்​கால மீட்​புக்குழு​வினரும் தயா​ராக உள்​ளனர். 1077 என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் மற்​றும் 0423-2450034, 2450035 என்ற எண்​களில் அவசர​கால தகவல்​கள் தெரிவிக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

கோட்​டாட்​சி​யர், வட்​டாட்​சி​யர் அலு​வல​கங்​களி​லும் கட்​டுப்​பாட்டுமையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கூடலூர், பந்​தலூர், ஊட்​டி,குந்தா தாலு​காக்​களில் அதி கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தால், அப்​பகு​தி​யில் மின்​சா​ரம், குடிநீர், கழிப்​பிட வசதி​யுடன் நிவாரண முகாம்​கள் தயா​ராக உள்​ளன.

சாலை​யில் விழும் மரங்​களை உடனடி​யாக அகற்ற தீயணைப்​பு, வனம் மற்​றும் வரு​வாய்த் துறை​யினர், உரிய இயந்​திரங்​களு​டன் தயார் நிலை​யில் இருக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. தேவைப்​படும்​பட்​சத்​தில் கோவை​யில் இருந்து பேரிடர் குழுக்​கள் வரவழைக்​கப்​படு​வர் என்​றும் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று அரக்​கோணம் பகு​தி​யில் இருந்து ஆய்​வாளர் பிரதீஸ் தலை​மை​யில் தேசிய பேரிடர் மீட்​புக் குழு​வினர் 30 பேர் ஊட்டி வந்​துள்​ளனர். இவர்​கள் பந்​தலூர், கூடலூர் பகு​தி​களுக்கு செல்ல உள்​ளனர். இதுகுறித்து ஆய்​வாளர் பிரதீஸ் கூறும்​போது, “கன மழை மற்​றும் நிலச்​சரிவு பா​திப்பு ஏற்​பட்​டால், உடனடி​யாக தக்க உபகரணங்​களு​டன் மீட்​புப்​ பணி​களை மேற்​கொள்​ளத்​ தயா​ராக உள்​ளோம்​” என்​றார்​.



By admin