• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

நூடுல்ஸ் போன்ற துரித உணவால் விரைவில் மரணம் நெருங்குமா?

Byadmin

May 5, 2025


அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்து, ஆரோக்கியம், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods (UPF)) அதிகமாக உண்ணும் மக்கள் விரைவாகவே இறக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்கட்கள், குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம், காலை உணவில் பயன்படுத்தப்படும் சீரல் (பதப்படுத்தப்பட்ட தானிய உணவு) போன்றவை இத்தகைய அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு எடுத்துக்காட்டாகும். தற்போது இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

யூ.பி.எஃப். எனப்படும் இத்தகைய உணவுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படுவதில்லை. உணவின் தோற்றத்தை மேம்படுத்த நிறமூட்டிகள் போன்ற சேர்க்கைப் பொருட்கள், இனிப்பூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரோக்கியத்தை இந்த உணவுகள் எப்படி மோசமாக்கும் என்று கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறும் சில நிபுணர்கள், பதப்படுத்துதலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன என்கின்றனர். இத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பது காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

By admin