• Wed. Oct 22nd, 2025

24×7 Live News

Apdin News

நெற்பயிர்கள் சேதம்: கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் என்ன பாதிப்பு?

Byadmin

Oct 22, 2025


தமிழ்நாடு, கனமழை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காவிரி டெல்டா மாவட்டங்கள்
படக்குறிப்பு, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரத்தநாடு, பூதலூர் போன்ற பகுதிகளில் விளைந்த நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, அம்மாபேட்டை மற்றும் நல்லவன்னியன் குடிகாடு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காகக் காத்திருக்கும் நிலையில் மழையிலும் நனைந்துவிட்டன.

திருவாரூரில் நீரில் மூழ்கிய பயிர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் எட்டியலூர், நீலக்குடி போன்ற பகுதிகளில் வெட்டாற்றின் கரைகள் உடையும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் சவுக்கு மரங்கள் மற்றும் மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, ஆற்றில் இறங்கிக் குளிப்பதற்கும், கரையோரத்தில் ‘செல்ஃபி’ எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



By admin