• Wed. Feb 26th, 2025

24×7 Live News

Apdin News

நெல்லை டூ சென்னை: சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா?

Byadmin

Feb 26, 2025


நெல்லை சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா? ரயில்வே துறை சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) பற்றாக்குறை காரணமாக சிறப்பு ரயில்கள் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டதாக ரயில் பயணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ரயில் ஓட்டுநர்கள் முறையாக நியமனம் செய்யப்படாததால் தற்போதுள்ள ரயில் ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக அகில இந்திய லோகோ தொழிலாளர் சங்கத்தினர் (AILRSA) கூறுகின்றனர்.

ஆனால், “போதிய ரயில் ஓட்டுநர்கள் பணியில் உள்ளதால் தினசரி ரயில்கள் தங்கு தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. அதை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று ரயில்வே துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிறப்பு ரயில்கள் நிறுத்தம்?

நெல்லையிலிருந்து தென்காசி மதுரை வழியாகவும் சிவகங்கை வழியாகவும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், நெல்லை – மேட்டுப்பாளையம், நெல்லை – தாம்பரம், நெல்லை – எழும்பூர் ஆகிய சிறப்பு ரயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இந்தச் சிறப்பு ரயில்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

By admin