• Thu. Oct 23rd, 2025

24×7 Live News

Apdin News

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு | tn government failure in paddy procurement AIADMK General Secretary eps alleges

Byadmin

Oct 23, 2025


தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்​முதல் செய்​வ​தில் தமிழக அரசு தோல்வி அடைந்​து​விட்​டது’’ என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

டெல்டா மாவட்​டங்​களில் குறுவை அறு​வடை பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அறு​வடை செய்​யப்​பட்ட நெல்லை கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகள் விற்​பனை செய்ய கொண்​டு​வந்து குவித்​துள்​ளனர். லாரி​கள் போதிய அளவு இல்​லாத​தால், கொள்​முதல் நிலை​யங்​களில் ஆயிரக்​கணக்​கான நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன.

அவ்​வப்​போது மழை பெய்​வ​தால், நெல்​லின் ஈரப்​ப​தம் 17 சதவீதத்​துக்கு மேல் அதி​கரித்​துள்​ளது. இதனால், கடந்த 2 நாட்​களாக தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் பல இடங்​களில் நெல் கொள்​முதல் நடை​பெற​வில்​லை. இதற்​கிடையே, தொடர்​மழை காரண​மாக அறு​வடைக்கு தயா​ராக இருந்த குறுவை பயிர்​களை​யும், இளம் சம்பா நெற்​ப​யிர்​களை​யும் மழைநீர் சூழ்ந்​துள்​ளது. இதனால் விவ​சா​யிகள் கவலை​அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி நேற்று தஞ்​சாவூர் வந்​தார். பின்​னர், காட்​டூர், மூர்த்​தி​யம்​பாள்​புரம் ஆகிய இடங்​களில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களை பார்​வை​யிட்​டு, விவ​சா​யிகளிடம் மழை பாதிப்​பு​கள், நெல் மூட்​டைகளின் தேக்​கம் குறித்து கேட்​டறிந்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக அரசின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் தின​மும் 2,000 மூட்​டைகளை கொள்​முதல் செய்​வ​தாக அரசு அறி​வித்​தது. ஆனால், விவ​சா​யிகளிடம் கேட்​ட​போது 800 மூட்​டைகள்​தான் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தாக தெரிவிக்​கின்​றனர். தமிழக அரசு தவறான தகவலைக் கூறி விவ​சா​யிகளை ஏமாற்​றுகிறது. எனவே, டெல்​டா​வில் உள்ள விவ​சா​யிகளுக்கு இந்த தீபாவளி ‘கண்​ணீர் தீபாவளி​யாக’​தான் உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அப்​போது, முன்​னாள் அமைச்​சர்​கள் ஆர்​.​காம​ராஜ், சி.​விஜய​பாஸ்​கர் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். தொடர்ந்​து, திரு​வாரூர் மாவட்​டத்​தில் வடு​வூர் அடிச்​சேரி, செரு​மங்​கலம் ஆகிய நெல் கொள்​முதல் நிலை​யங்​களி​லும், சித்​தனக்​குடி​யில் மழை​யால் பாதிக்​கப்​பட்​டுள்ள சம்பா சாகுபடி வயல்​களை​யும் பழனி​சாமி பார்​வை​யிட்​டு, விவ​சாயிகளிடம் குறை​களை கேட்​டறிந்​தார்.

பின்​னர், திரு​வாரூரில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தஞ்​சை, திரு​வாரூர் மாவட்​டங்​களில் விவ​சா​யிகளிடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​பட்​டு, ஒவ்​வொரு கொள்​முதல் நிலை​யத்​தி​லும் தலா 7,000 நெல் மூட்​டைகள் வரை தேங்​கி​யுள்​ளன. அதே​போல, கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் 8,000 நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன. இந்த வகை​யில் டெல்டா மாவட்​டங்​களில் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் 30 லட்​சம் நெல் மூட்​டை

கள் தேங்​கி​யுள்​ளன. இவற்றை விவ​சா​யிகள் மழை​யில் நனைந்து விடாத​படி மூடி​வைத்​திருந்​த​தால், நெல்​மணி​கள் முளை​விட்​டுள்​ளன. பல குவியல்​களில் நெல்​மணி​கள் அவிழ்ந்​து​விட்​டன.

கொள்​முதல் நிலை​யங்​களுக்கு லாரி​கள் முறை​யாக வரு​வ​தில்லை என சுமைப் பணி தொழிலா​ளர்​களும், டீசலுக்கு கூட பணம் கொடுப்​பதில்லை என லாரி உரிமை​யாளர்​களும் தெரிவிக்​கின்​றனர். ஒட்​டுமொத்​த​மாக நெல் கொள்​முதல் செய்​வ​தில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்​டது.

முந்​தைய திமுக ஆட்​சிக் காலத்​தில் நாளொன்​றுக்கு 800 மூட்​டைகள் மட்​டுமே கொள்​முதல் செய்​யப்​பட்​டிருந்​ததை அதி​முக ஆட்​சிக் காலத்​தில் ஆயிரம் மூட்​டைகளாக உயர்த்​தினோம். தற்​போதைய திமுக ஆட்​சி​யில் 2 ஆயிரம் மூட்​டைகள் நெல் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தாக அமைச்​சர் உண்​மைக்கு மாறான தகவலை சட்​டப்​பேர​வை​யிலேயே தெரிவிக்​கிறார்.

ஆக.18-ம் தேதியே செறிவூட்​டப்​பட்ட அரிசிக்கு அனு​ம​தியை மத்​திய அரசு வழங்​கி​விட்ட நிலை​யில், அந்​தத் தகவலைக் கூட தெரிந்து கொள்​ளாமல், “மத்​திய அரசு அனு​மதி கொடுக்​க​வில்​லை. நீங்​கள் வேண்​டு​மா​னால் அனு​ம​தியை வாங்​கித் தாருங்​கள்” என சட்​டப்​ பேர​வை​யிலேயே தவறான தகவலை உணவுத் துறை அமைச்​சர் பதிவு செய்​கிறார்.

மேலும், ஆதார விலையை உயர்த்தி கொடுத்​து​விட்​ட​தாக தெரிவிக்​கிறார். அதே​நேரத்​தில், உற்​பத்​திப் பொருட்​களின் விலை அதி​கரிப்​பால், 2021-ம் ஆண்டு விவ​சா​யிகளுக்கு கிடைத்த லாபம்​தான் இன்​றும் கிடைக்​கும் நிலை உள்​ளது. எனவே, தமிழக அரசு பாதிக்​கப்​பட்​டுள்ள அறு​வடை நெற்​ப​யிர்​களின் நிலை குறித்து உடனடி​யாக கணக்​கெடுத்​து, உரிய நிவாரணத்தை விவ​சா​யிகளுக்கு வழங்க வேண்​டும். மேலும், கொள்​முதல் நிலை​யங்​களில் தேங்​கி​யுள்ள நெல் மூட்​டைகளை விரை​வாககிடங்குக்கு கொண்டு செல்வதுடன், நெல்​லை உடனடி​யாக கொள்​முதல் செய்​ய​வும்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார்​.



By admin