• Mon. Jun 9th, 2025

24×7 Live News

Apdin News

நேதாஜி – வல்லபாய் படேல் இடையே ஒரு உயிலால் ஏற்பட்ட மனக்கசப்பு என்ன? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Jun 9, 2025


சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், காங்கிரஸ் சுதந்திரப் போராட்டம், போஸ், படேல், நேரு, காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுபாஷ் சந்திர போஸுக்கு நன்றி தெரிவித்து உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதினார் படேல்.

  • எழுதியவர், உர்விஷ் கோத்தாரி
  • பதவி, பிபிசி குஜராத்தி

சர்தார் படேலும் சுபாஷ் சந்திர போஸும் காங்கிரஸ் கட்சியில் இருபது ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்தனர். ஆனால் மற்ற தலைவர்களைவிடவும் தன்னை விட 22 வயது குறைவான சுபாஷுடன் பழக படேலுக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. அவர்களின் உறவில் பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. எனினும் அவர்கள் உறவின் விசித்திரமான நுணுக்கங்கள், அவர்கள் இருவரின் குணாதிசயங்களுக்கு மட்டுமல்ல சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருவருக்கும் இடையே ஒரு தலைமுறை வயது வித்தியாசம் இருந்தாலும் சுயராஜ்ஜிய இயக்கத்தில் நுழைந்ததில் இரு தலைவர்களுக்கும் இடையே மூன்று ஆண்டு இடைவெளியே உள்ளது. 1918-ல் காந்தியின் கேதா சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார் வல்லபாய், அதே வேளையில் போஸ் ‘தேஷ்பந்து’ என அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

படேல் 1930-ல் முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார், போஸ் 1921-ல் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ் சந்திர போஸ் மிக விரைவாக காங்கிரஸின் இளம் தலைமை வட்டத்திற்குள் நுழைந்தார். தன்னை விட ஏழு வருடங்கள் பெரியவரான ஜவஹர்லால் நேருவிடம் அவ்வப்போது கூட்டாளியாகவும், விமர்சகராகவும் இருந்துள்ளார்.

வல்லபாய் 1928ம் ஆண்டு பர்தோலி சத்தியாகிரகத்தை வழிநடத்திய பிறகு சர்தார் என அழைக்கப்பட்டார். போஸ் அவரின் தலைமையை பாராட்டினார், ஆனால் 1928-ம் ஆண்டு கல்கத்தா (இப்போது கொல்கத்தா) அமர்வில் அவர்கள் இருவருக்கும் இடையே அன்பான பரிமாற்றங்கள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. சர்தார் படேலின் மூத்த சகோதரரான விட்டல்பாய் படேல் உடன் நெருக்கமான உறவை பேணி வந்தார் போஸ்.

By admin