7
பங்களாதேஷில் நடைபெற்ற சமீபத்திய தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக ஜமாத் இ-இஸ்லாமி கட்சி (Bangladesh Jamaat-e-Islami) குற்றஞ்சாட்டியுள்ளது.
Bangladesh Nationalist Party (BNP) வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளன.
ஜமாத் இ-இஸ்லாமி கட்சித் தலைவர் Shafiqur Rahman, “மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது” என்று குற்றம்சாட்டி, இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வ முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் Khaleda Ziaவின் மகனும், 60 வயதுடைய Tarique Rahman புதிய பிரதமராக பதவியேற்கலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், 30 வயதிற்குக் குறைவான இளைஞர்கள் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பங்களாதேஷில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.