• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

பணிச்சுமையை குறைக்க 10 பேரை கொன்ற செவிலியர் – இறுதியில் நேர்ந்தது என்ன?

Byadmin

Nov 7, 2025


பணிச்சுமையை குறைக்க 10 பேரை கொன்ற செவிலியருக்கு என்ன நேர்ந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

ஜெர்மனியில் ஒரு செவிலியர், 10 நோயாளிகளைக் கொன்றது மற்றும் மேலும் 27 பேரைக் கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொது வெளியில் பெயர் வெளியிடப்படாத அந்த ஆண் செவிலியர், இரவு பணியின்போது தனது பணிச்சுமையைக் குறைக்கும் முயற்சியில், பெரும்பாலும் வயதான நோயாளிகளுக்கு வலி நிவாரணிகள் அல்லது மயக்க மருந்துகளைச் செலுத்தினார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தக் குற்றங்கள் மேற்கு ஜெர்மனியில் உள்ள வூர்சலென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை செய்யப்பட்டுள்ளன.

அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த மேலும் பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்களையும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

ஏஎஃப்பி ஊடகத்தின்படி பெயர் வெளியிடப்படாத அந்த நபர் 2007 இல் செவிலியர் பயிற்சியை முடித்துள்ளார். 2020 முதல் வூர்சலென் மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார்.

By admin