• Thu. May 1st, 2025

24×7 Live News

Apdin News

பதின்வயது மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பது ஏன்?

Byadmin

May 1, 2025


தற்கொலை, மன அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்வது?

இந்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 11ஆம் வகுப்புப் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் அவரை அடித்ததோடு, மிரட்டியதுதான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

மார்ச் மாதம் ஒன்றாம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்காக தயாராகிவந்த நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது.

By admin