• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

“பன்றி கொழுப்பு சாத்தியமில்லை” – திருப்பதி லட்டு குறித்து சிபிஐ குழுவின் அறிக்கை என்ன?

Byadmin

Feb 5, 2026


திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இதனை விசாரித்த சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு( SIT ) ஜனவரி 22 அன்று நெல்லூரில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகையின்படி, திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் ‘தாவர எண்ணெய்’ கலப்படம் செய்யப்பட்டதாகவும், தர சோதனைகளில் அது கண்டறியப்படுவதைத் தடுக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டதாகவும் விசாரணையின் போது சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது.

ஆய்வக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட இல்லை என்றும் சிறப்பு புலனாய்வுக் குழு குறிப்பிட்டது.

2019 மற்றும் 2024 க்கு இடையில் நெய் கலப்படம் மூலம் ரூ.234 கோடி மதிப்பிலான மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, மொத்தம் 36 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் கோப்புப் படம்

பட மூலாதாரம், RAJESH

படக்குறிப்பு, திருப்பதியில் லட்டு தயாரிப்பு (கோப்புப் படம்)

ஆய்வக சோதனைகள் வெளிப்படுத்தியது என்ன?

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை முடித்துள்ளது.

By admin