• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

“பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக டெல்லியில் சுவரொட்டி”; திருப்பூரில் வங்கதேசத்தவர் 6 பேர் கைது

Byadmin

Feb 23, 2026


வங்கதேசத்தவர் கைது

பட மூலாதாரம், Tirupur City Police

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியவர்களுடன் தொடர்புடையதாக வங்கதேசத்தவர்கள் 6 பேரை, திருப்பூரில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து, வடமாநிலத்தவர்கள் என்ற பெயரில் திருப்பூரில் தங்கி பனியன் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்கு குறித்து டெல்லி போலீசார் முழுமையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்று பிபிசி தமிழிடம் கூறிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், அவர்கள் மீது திருப்பூரில் எந்த வழக்கும் இல்லை என்றார்.

இதுபோன்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பூரில் 200க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லி போலீசார் இங்கு வந்து கைது செய்யும்வரை, மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

By admin