• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

பராசக்தி படத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகளின் வரலாற்றுப் பின்னணி என்ன?

Byadmin

Jan 10, 2026


தீ பரவட்டும்: பராசக்தியில் நீக்கப்பட்ட பேச்சுகளின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Red Giant Movies

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் சனிக்கிழமையன்று (ஜனவரி 10) வெளியாகிறது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டபோது, அந்தப் படத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட விஷயங்களை மாற்றவும் நீக்கவும் சொல்லப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையுடன் தொடர்புடைய சில பகுதிகளும் உண்டு. ‘தீ பரவட்டும்’, “அண்ணாதுரைதான் ஆள்கிறான்” ஆகிய இந்த வாசகங்களின் பின்னணி என்ன?

விஜய் நடித்து வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவது தொடர்பான சிக்கலால் வெளியாகவில்லை. இந்த நிலையில், பராசக்தி திரைப்படம் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டபோது, அதிலும் பல மாற்றங்களைச் செய்யும்படி தணிக்கை வாரியம் பரிந்துரைத்திருக்கிறது.

அந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, தற்போது பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சில பிறரை திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் தொடர்பானவை. பல பரிந்துரைகள் அரசியல் ரீதியான காட்சிகள் வசனங்கள் தொடர்பானவை. அப்படி தணிக்கை வாரியம் ஆட்சேபித்த இரண்டு முக்கியமான மாற்றங்கள், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை தொடர்பானது.

ஒன்று, ‘தீ பரவட்டும்’ என்ற வாசகம். இந்த வாசகம் எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடத்தில் எல்லாம் அதனை “நீதி பரவட்டும்” என்று மாற்றும்படி வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல, “எங்களை நீக்கிவிட்டு” என்று தொடங்கி “இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என்ற வசனத்தையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்தி அரக்கி என்ற கொடும்பாவி எரிக்கும் காட்சிகளை நீக்கவும் ‘இந்தி அரக்கி’ என வரும் இடங்களில் வெறும் ‘அரக்கி’ என மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

‘தீ பரவட்டும்’ என்ற வரியும் “இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆளுகிறான்” என்ற உரையும் இப்போதும் திராவிட இயக்க மேடைகளில் குறிப்பிடப்படும் வாசகங்களாக இருக்கின்றன. உண்மையில் இந்த வாசகங்களின் பின்னணி என்ன? இந்தி அரக்கி என்ற கொடும்பாவி எங்கே எரிக்கப்பட்டது?

By admin