• Mon. Mar 17th, 2025

24×7 Live News

Apdin News

பலுசிஸ்தான் இந்தியாவுடன் சேர விரும்பிய போது நேரு நிராகரித்தாரா? பாகிஸ்தான் என்ன செய்தது? – ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Mar 17, 2025


பலுசிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேரு, ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் வி.கே. மேனன்

இந்தியாவின் பிரிவினைக்கு பிறகு, கலாத் பிராந்தியம்- அதாவது பலுசிஸ்தான் சுமார் 227 நாட்களுக்கு ஒரு சுதந்திர, இறையாண்மை பெற்ற நாடாக இருந்தது.

பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் சேர விரும்பவில்லை, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவும் இத்துடன் ஒத்துப் போயிருந்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இந்தியாவிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி சமஸ்தானங்கள் சுதந்திர நாடுகளாக இருக்க முடியவில்லை.

இரானிய பீடபூமியின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள பலுசிஸ்தானின் பெரும்பகுதி கடும் குளிர் நிறைந்த பாலைவனம். பலுசிஸ்தான் தற்போது மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், இரானின் சிஸ்டன் பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு பகுதி இதில் அடக்கம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தஹார் ஆகியவை பலுசிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தவை. பலுச்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளனர். ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கமுள்ள இரானின் பலுசிஸ்தானிலும், பலுச்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளனர்.

By admin