• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் | Former vice chancellor letter to cm for steps to appoint vice chancellors in universities

Byadmin

Oct 7, 2025


சென்னை: தமிழகத்​தில் உயர்​கல்​விப் பணி​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​களை நியமிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு முதல்​வருக்கு முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லினுக்கு அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் இ.பால​குரு​சாமி அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மாநிலத்​தின் பல்​வேறு பல்​கலைக்​கழகங்​கள் துணைவேந்​தர்​கள் இல்​லாமல் பல ஆண்​டு​களாக இயங்கி வரு​வ​தால் உயர்கல்வி வளர்ச்​சி​யில் தேக்க நிலை ஏற்​பட்​டுள்​ளது. பல்​கலைக்​கழகங்​களின் கல்​வி, நிர்​வாகப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

துணைவேந்​தர்​கள் இல்​லாத​தால் முக்​கிய​மான ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாகவே இருக்​கின்​றன. இதனால், பணி​யில் உள்ள ஆசிரியர்​களின் பணிச்​சுமை அதி​கரித்​துள்​ளது. இதனால், கல்​வி, ஆராய்ச்​சி​யின் தரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. பல்​வேறு பல்​கலைக்​கழகங்​களால் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நிதியை சரி​யாகப் பயன்​படுத்த இயலாமல் போகிறது. குறிப்​பாக உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​துதல், ஆய்​வுக்​கான மானி​யங்​களை ஒதுக்​குதல், மாணவர்​களுக்​குத் தேவை​யான வசதி​கள் ஆகிய​வற்​றுக்கு நிதி​யைப் பயன்​படுத்த இயல​வில்​லை.

தேர்​வு​கள் தேவை​யின்றி தள்​ளிப் போதல், உரிய நேரத்​தில் தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​ப​டா​மை, சான்​றிதழ்​கள் வழங்​கு​வ​தில் தேவை​யில்​லாத தாமதம் என மாணவர்​கள் பல்​வேறு பிரச்​சினை​களை எதிர்​கொள்​கின்​றனர். கல்​வி​யின் தரத்​தை​யும், தேசிய அளவில் நமது பல்​கலைக்​கழகங்​கள் பெற வேண்​டிய இடத்​தை​யும் இழக்​கும் ஆபத்து உள்​ளது. எனவே, தாங்​கள் இந்த விஷ​யத்​தில் தலை​யிட்டு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கிறேன். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin