8
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (30) மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு “எச்சரிக்கை நிலை” வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் உண்மையான வெப்ப நிலையை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்துவதுடன், தொடர்ந்து அவ்வாறு செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் போதுமான அளவில் தண்ணீர் அருந்தி நீரேற்றத்துடன் இருக்கவும், அதிக வெப்ப நேரங்களில் வெளிப்புறச் செயல்பாடுகளை குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.