• Thu. Dec 4th, 2025

24×7 Live News

Apdin News

பஷ்தூன்: இந்தியப் பிரிவினையின்போது இந்த மக்கள் பாகிஸ்தானுடன் சென்றது ஏன்?

Byadmin

Dec 4, 2025


பஷ்தூன் பழங்குடியினர் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

பட மூலாதாரம், JINNAH.BLOGSPOT.COM

படக்குறிப்பு, ஜின்னா பழங்குடித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு.

பாகிஸ்தான் எனும் புதிய நாடு உருவாவதற்கு முன்பே அதற்கு ஆதரவு அறிகுறிகள் இருந்ததால், வடமேற்கு எல்லை (ஃப்ரண்டியர்) மாகாணம் ஏப்ரல் 17, 1948 அன்று பாகிஸ்தானுடன் இணைவது உறுதியாகிவிட்டது.

மறுநாள் வெளியான அமெரிக்க செய்தித்தாள் நியூயார்க் டைம்ஸ் செய்திப்படி, “பெஷாவரில் உள்ள 200 சர்தார்கள்(பழங்குடியினத் தலைவர்கள்) கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னாவிடம் தங்களைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.”

இந்தத் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் தொகை 25 லட்சம் ஆகும். இவர்களது பகுதி தெற்கு வஸிரிஸ்தானில் இருந்து சித்ரால் வரை சுமார் 1,600 கிலோமீட்டர் பரவி இருந்தது.

நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, தங்கள் மக்களைப் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் பாகிஸ்தானின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்று ஆளுநர் ஜெனரல் ஜின்னாவுக்கு உறுதியளித்தார்.

“கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொள்வதாக உறுதியளித்து முஸ்லிம் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்,” என்றும் அந்த செய்தித்தாள் எழுதியது.

By admin