• Wed. Apr 30th, 2025

24×7 Live News

Apdin News

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி – முப்படைகளிடம் பிரதமர் கூறியது என்ன? இன்றைய முக்கிய செய்திகள்

Byadmin

Apr 30, 2025


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு பிரதமர் முழு சுதந்திரம் - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இன்றைய (30/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அனுமதி அளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, ‘தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம்’ என நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். “இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகத் தெரிய வந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று அந்தச் செய்தி கூறுகிறது.

By admin