• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

பஹ்ரைச் என்கவுன்டர்: உத்தரபிரதேசத்தில் இந்து – முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக என்ன நடந்தது?

Byadmin

Oct 20, 2024


பஹ்ரைச் என்கவுன்டர்
படக்குறிப்பு, அக்டோபர் 13ஆம் தேதி மாலை, துர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது, ​​இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் என்கவுண்டரில் சுடப்பட்டதாகவும் பஹ்ரைச் போலீசார் கூறியுள்ளனர்.

என்கவுன்டர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த என்கவுன்டர் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து மவுனம் காக்கின்றனர்.

ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறை கைது செய்ததாக பஹ்ரைச் காவல்துறை கண்காணிப்பாளர் விருந்தா சுக்லா கூறினார்.

By admin