• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

பஹ்ரைன் வான்வெளியை மூடிய பிறகும் இரு விமானங்களில் 384 தமிழர்கள் சென்னை வந்தது எப்படி?

Byadmin

Mar 28, 2026


மத்திய கிழக்கு, பஹ்ரைன், போர், தமிழர்கள்
படக்குறிப்பு, மார்ச் 18, பஹ்ரைனிலிருந்து சௌதி அரேபியா வழியாக சென்னை வந்து சேர்ந்த தமிழர்கள்

    • எழுதியவர்,
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பஹ்ரைனிலிருந்து கடந்த மார்ச் 18 மற்றும் மார்ச் 21ஆம் தேதி இயக்கப்பட்ட இரு சிறப்பு விமானங்கள் மூலம் 384 தமிழர்கள் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைனின் வான்வெளி மூடப்பட்டு, விமானச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாடு திரும்ப காத்திருக்கின்றனர்.

பிப்ரவரி 28ஆம் தேதி இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் மிக அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாக பஹ்ரைன் உள்ளது.

காரணம், பஹ்ரைனில்தான் வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் உள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 27ஆம் தேதி வரை, 362 டிரோன்களையும், 154 ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளதாக பஹ்ரைன் அரசு கூறுகிறது.

By admin