• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு: நிலக்கரி சுரங்க ஊழியர்கள் 20 பேர் பலி

Byadmin

Oct 11, 2024


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் துகி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர், தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர் பலூசிஸ்தான் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

By admin