• Wed. Oct 29th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானுக்கு செமிகண்டக்டர் துறையை மேம்படுத்த சௌதி அரேபியாவின் உதவி தேவைப்படுவது ஏன்?

Byadmin

Oct 29, 2025


பாகிஸ்தான் - சௌதி அரேபியா - செமிகண்டக்டர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நம்பத்தகுந்த கூட்டாளியாக இருக்கவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது

பாகிஸ்தானின் செமிகண்டக்டர் துறையை முன்னேற்ற நீண்ட கால திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் கட்டமாக 7200 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ஷாஜா ஃபாதிமா கவாஜா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வேலை செய்யக்கூடிய, இன்டக்ரேடட் சர்க்கியூட் (IC) வடிவமைப்பும் ஆராய்ச்சியும் செய்யத் தெரிந்தவர்களை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் இலக்கு என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

மூன்று கட்டத் திட்டத்தின் மூலமாக, 2035க்குப் பிறகு மின்னணுவியல் துறையில் உலகளாவிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் நினைக்கிறது.

”இந்த திட்டம் பாகிஸ்தானுக்கு செமிகண்டக்டர் துறையில் திறமைசாலிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் தடைகளையும் நாடு சமாளிக்க முடியும்.” என்கிறார் ஷாஜா பாத்திமா.



By admin