• Tue. Jun 3rd, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானை கொலம்பியா ஆதரித்ததன் பின்னணியில் சீனாவா? இந்திய குழு சென்றதும் என்ன நடந்தது?

Byadmin

Jun 1, 2025


கொலம்பியா, பாகிஸ்தான், இந்தியா, சீனா, தெற்காசியா

பட மூலாதாரம், @ShashiTharoor

படக்குறிப்பு, கொலம்பியாவிற்கு பயணம் செய்த அனைத்துக் கட்சிக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்கினார்.

பாகிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான தனது அறிக்கையை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் பார்வையை தெளிவுபடுத்த சசி தரூர் தலைமையிலான ஒரு குழு அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (மே 30), கொலம்பியாவில் இருந்த அந்தக் குழு, அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிற பிரதிநிதிகளைச் சந்தித்தது.

“ஒரு அறிக்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. அதை திரும்பப் பெறுவதாகவும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கொலம்பியா முழுமையாகப் புரிந்துகொண்டதாகவும் அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்,” என்று தரூர் கூறினார் .

By admin