• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் – ஆப்கன் பேச்சுவார்த்தை நடத்திய கத்தாரே எல்லை பிரச்னையில் பின் வாங்கியது ஏன்?

Byadmin

Oct 20, 2025


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தாலிபன் , அமைதி ஒப்பந்தம்

பட மூலாதாரம், @MofaQatar_EN

பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கும் இடையே சில நாட்கள் நீடித்த சண்டையைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு இரு தரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன.

கத்தார் தலைநகர் தோஹாவில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பிபிசி பஷ்தோ சேவையின் தகவல்களின்படி, தோஹா பேச்சுவார்த்தையில் ‘நிலைமையை இயல்பாக்குவதற்கும், இரு தரப்பு மக்களிடையே பரஸ்பர தொடர்பு மற்றும் வர்த்தகத்தை இயல்பாக்குவதற்கும் முயற்சி’ மேற்கொள்ளப்படுவதாக ஆப்கானிஸ்தான் தாலிபன் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் முஜாஹித் கூறினார்.

ஞாயிறு அன்று ஊடகங்களிடம் பேசிய அவர், கத்தார் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள “எல்லை” (Border) எனும் வார்த்தை தங்களிடம் விவாதிக்கப்படவில்லை என்றும் அது குறித்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் யாகூப் கூறினார்.



By admin