• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் என்ன நடக்கிறது? பதற்றத்திற்கு காரணம் என்ன?

Byadmin

Oct 13, 2025


பாகிஸ்தான் எல்லைச் சாவடிககளில் ஆப்கானிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் ஆப்கன் தாலிபன் ராணுவம் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து சனிக்கிழமை இரவு பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

பாகிஸ்தான் படைகள் 21 ஆப்கன் எல்லைகளைக் கைப்பற்றியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத பயிற்சி தளங்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட இடங்களை அழித்ததாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதில் தாக்குதலில் “200-க்கும் மேற்பட்ட தாலிபன் மற்றும் கூட்டாளி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.



By admin