• Sat. Oct 11th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் காதல் ஜோடி ரகசியமாக எல்லை தாண்டி இந்தியா வந்தது எப்படி?

Byadmin

Oct 11, 2025


காதல், பாகிஸ்தானை விட்டு வெளியேறிய ஜோடி,  அடைக்கலம்,   இந்தியா

பட மூலாதாரம், Kutch (East) Police

2024 ஏப்ரல் மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

இரு அண்டை நாடுகளுக்குமான உறவு தற்போது கசப்பானதாக இருந்தாலும், கடந்த புதன்கிழமை நடந்த ஒரு சம்பவம், காதல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், தேவைப்பட்டால் எந்த எல்லையையும் கடந்துவிடும் என்பதையும் குறிக்கிறது.

புதன்கிழமை காலை, ரான் ஆஃப் கட்ச் (இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள சதுப்பு நிலங்களின் பகுதி) பகுதியில் உள்ள காதிர் தீவின் ரத்தன்பார் கிராம மக்கள், ஒரு இளம்பெண் மற்றும் இளைஞர் ஜோடியாக வந்ததைக் கண்டார்கள்.

அவர்களிடம் பேசிய போது, தாங்கள் இருவரும் காதலர்கள் என்றும், ‘தங்கள் காதலுக்காக’ பாகிஸ்தானை விட்டு வெளியேறி, அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு வந்ததாக தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



By admin