• Sun. Dec 28th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான்: சிந்து நதிநீரில் தங்கம் பிரித்தெடுப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஒரு விரிவான அலசல்

Byadmin

Dec 28, 2025


பாகிஸ்தான் - சிந்து நதி - தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆற்றுநீரில் தங்கம் எடுப்பது பாகிஸ்தானில் வெற்றிகரமான வணிகமாக இருந்தது. (சித்தரிப்புப் படம்)

“நான் சிந்து நதிக்கரையில் என் கைகளால் தங்கம் தேடிவந்தேன். நல்ல நாட்களில் சுமார் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும். என் குடும்பத்தை கவனிப்பது எளிதாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் இந்த தங்கச் சுரங்க வேலையில் இயந்திரங்களின் பயன்பாடு தொடங்கியது”

“பல நூற்றாண்டுகளாக ஆற்று நீரிலிருந்து தங்கள் கைகளால் தங்கம் எடுத்து வந்த பழங்குடியினருக்கு இப்போது இடமில்லை என்று நான் உணர்கிறேன்.”

“இப்போது நான் இயந்திரங்களில் வேலை செய்பவர்களுக்குக் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறேன்; அந்த தினக்கூலி சில நேரங்களில் கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைக்காமலும் போகிறது.”

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானின் டியாமிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபிபுல்லா இப்படிக் கூறினார்.

ஆற்று நீரிலிருந்து தங்கம் எடுக்கும் வேலையை தனது மூதாதையர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் 35 வயதான ஹபிபுல்லா. அவரையும் சேர்த்து, அவரது பழங்குடி மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டத் தெரிந்த ஒரே தொழிலாகவும் அவர் அதைக் குறிப்பிடுகிறார்.

By admin