• Wed. Dec 24th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான், சீனாவுடன் நெருங்கும் வங்கதேசம் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Dec 24, 2025


வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், @ChiefAdviserGoB

படக்குறிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நியூயார்க்கில் சந்தித்தனர்.

வங்கதேசத்தின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பாகிஸ்தான் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். வங்கதேசத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் வரை, பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோவுடன் (பின்னர் பிரதமரானவர்) பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் மறுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் பாகிஸ்தானும் வங்கதேசத்தின் சுதந்திரத்தை ஏற்க மறுத்தது. ஆனால், பாகிஸ்தானின் நிலைப்பாடு திடீரென மாறியது. பிப்ரவரி 1974இல், லாகூரில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (OIC) உச்சி மாநாடு நடைபெற்றது.

அப்போது பிரதமராக இருந்த பூட்டோ, முஜிபுர் ரஹ்மானுக்கு அதிகாரபூர்வ அழைப்பு விடுத்தார். முஜிபுர் ரஹ்மான் முதலில் அதில் கலந்துகொள்ள மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார்.

பிப்ரவரி 22, 1974 அன்று பாகிஸ்தான் வங்கதேசத்தை அங்கீகரித்தது. இந்த அங்கீகாரத்தை பூட்டோ இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (OIC) உச்சி மாநாட்டிலேயே அறிவித்தார்.

இந்த அங்கீகாரத்தை அறிவிக்கும்போது ஜுல்பிகர் அலி பூட்டோ, “அல்லாவின் பெயராலும், இந்த நாட்டு குடிமக்களின் சார்பாகவும், வங்கதேசத்திற்கான அங்கீகாரத்தை நாங்கள் அறிவிக்கிறோம். நாளை ஒரு தூதுக் குழு வரும், அவர்களை 7 கோடி முஸ்லிம்கள் சார்பாக நாங்கள் வரவேற்போம்,” என்று கூறினார்.

By admin