• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலி – ரஷித் கான் கூறியது என்ன?

Byadmin

Oct 18, 2025


பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், X/@ACBofficials

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்.” என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூற்றுப்படி, கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று வீரர்கள் தவிர, இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர்.



By admin