• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் தாலிபனுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தாலிபன் ஏன் நடவடிக்கை எடுக்காது?

Byadmin

Oct 25, 2025


ஒரு டாங்கியின் மீது அமர்ந்திருக்கும் டிடிபி உறுப்பினர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் அமைப்பின் உறுப்பினர்களின் கோப்புப் படம்.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

காபூலில் நடந்த வான்வழி தாக்குதல்கள் உட்பட பகைமை கடுமையாக தீவிரமடைந்த பிறகு இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இது, சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

எல்லைப் பகுதியில் வன்முறை ஏற்படுவது புதிதல்ல. 2021 ஆகஸ்டில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் டிடிபி (தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்) தொடர்புடைய செயல்பாடுகள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாகிஸ்தானும் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாலிபன் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கான் மண்ணில் பத்துக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



By admin