• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் – துருக்கி இரு நாடுகளின் நெருக்கம் இந்தியாவுக்கு பின்னடைவா?

Byadmin

May 12, 2025


கடந்த ஆண்டு டிசம்பரில் எர்டோகன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு டிசம்பரில் எர்டோகன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார்

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் நடுநிலையாக இருப்பதாகத் தோன்றும் வேளையில் துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்கள் ஆதரவை வெளிப்படையாக வெளிப்படுத்தின.

இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னையில் பாகிஸ்தானுக்கு துருக்கி வெளிப்படையாக ஆதரவளித்தால், இஸ்ரேல் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது.

இரு நாடுகளுக்கு இடையிலான சண்டைநிறுத்த அறிவிப்பை வரவேற்றிருக்கும் துருக்கி, இந்த வாய்ப்பை இரு நாடுகளும் நேரடி மற்றும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

டிரோன்களுக்காக துருக்கியை பாகிஸ்தான் நாடுகிறது என்று இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. அதேபோல, இஸ்ரேலிய டிரோன்கள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறியிருந்தது.

By admin