• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் பிரதமரை புதின் சந்தித்ததால் இந்தியாவுக்கு என்ன கவலை?

Byadmin

Sep 5, 2025


புதினுடன் கைகுலுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

பட மூலாதாரம், @CMShehbaz

படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த நிகிதா எஸ். குருஷ்சேவ் 1955-ல் ஸ்ரீநகருக்கு வந்தார். அப்போதைய ஜம்மு-காஷ்மீர் பட்டத்து இளவரசர் கரண் சிங் அவரை அழைத்திருந்தார்.

இந்த பயணத்தின் போது, நிகிதா குருஷ்சேவ், பாகிஸ்தான் தன்னையும் சோவியத் யூனியனின் பிரதமர் நிகோலாய் புல்கானினையும் காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

“கரண் சிங்கின் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், கராச்சியில் உள்ள சோவியத் தூதரிடம் வலியுறுத்தியது,” என நிகிதா குருஷ்சேவ் கூறினார்,

பாகிஸ்தானின் செயல் குறித்து கூறிய குருஷ்சேவ், “இது தீய எண்ணத்தால் செய்யப்பட்ட செயல். பாகிஸ்தான் தனது தோள்களில் அதிக பொறுப்பை ஏற்றிக்கொள்கிறது. இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தானின் முன்னெப்போதும் இல்லாத தலையீடு ஆகும். என்ன செய்ய வேண்டும், யாரை நண்பராக்க வேண்டும் என்று எங்களிடம் கூற எந்த நாட்டுக்கும் துணிச்சல் இருந்ததில்லை. இந்தியாவுடன் எங்களுக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது.” என்று கூறினார்.

By admin