• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் மீது தாக்குதல் – உளவுத்துறை அளித்த முக்கிய தகவல், இந்திய அரசு கூறுவது என்ன?

Byadmin

May 7, 2025


'உளவுத்துறை அளித்த முக்கிய தகவல்' - பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து இந்தியா  கூறுவது என்ன?

பட மூலாதாரம், PIB INDIA

படக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது 15 நாட்களாகியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது புதன்கிழமை அதிகாலை இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று குறிப்பிட்ட மிஸ்ரி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே புதன்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் கூறினார்.

பஹல்காம் தாக்குதல்கள் நடைபெற்று 15 நாட்கள் ஆகியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் நடவடிக்கை அளவிடப்பட்டதாக இருந்தது என்றார். இந்த தாக்குதல்களில் பொது மக்கள் உயிரிழக்கவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மிஸ்ரி, “ஏப்ரல் 22, 2025 அன்று, லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். மும்பையில் 2008 நவம்பர் 26 தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

By admin