• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பலூச் விடுதலை ராணுவம் என்ன செய்தது? மீண்டு வந்த பயணிகள் தகவல்

Byadmin

Mar 13, 2025


பாகிஸ்தான், ரயில் கடத்தல், ஜாஃபர் எக்ஸ்பிரஸ், பலூச் விடுதலை ராணுவம்

பட மூலாதாரம், EPA

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று (மார்ச் 11) பலூச் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டது.

இந்த ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள், தாங்கள் அனுபவித்த பயங்கரமான நிகழ்வுகளைப் பற்றி தெரிவித்துள்ளனர்.

“அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல், துப்பாக்கிச்சூடு நடந்த நேரம் முழுவதும் நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம்”, என்று ரயிலில் பயணித்த இஷாக் நூர் பிபிசியிடம் கூறினார்.

இந்த ரயிலில் பயணித்த 400க்கும் மேற்பட்ட பயணிகளில் இவரும் ஒருவர். பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து, பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் கடத்தினர். அதில் பயணித்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

By admin