• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம்  | Communist leaders slams ADMK

Byadmin

Nov 8, 2025


சென்னை: எஸ்​ஐஆர் ஆபத்து நிறைந்​தது என தெரிந்​திருந்​தும் பாஜக​வுட​னான கூட்​ட​ணி​யால் அதி​முக அதை எதிர்க்க முடி​யாமல் இருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் விமர்சித்​துள்​ளன.

ரஷ்ய நவம்​பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்​தியகம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் சார்​பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலு​வல​கங்​களி​லும் நேற்று நடை​பெற்​றது. பாலன் இல்​லத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செயலா​ளர் மு.வீர​பாண்​டியன் கொடியேற்​றி​னார். பின்​னர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறும்போது, “எஸ்​ஐஆர் தொடக்க நிலை யிலேயே தோற்​று​விட்​டது. அதில்குளறு​படிகள் உள்​ளன. இதில்அதி​முக​வின் நிலைப்​பாடும் ஆபத்​தான​தாக​வும், பரி​தாப​மாக​வும் உள்​ளது. அதி​முக​வின் குரல் ஆர்​எஸ்​எஸ், பாஜக​வின் குரலாக மாறி வரு​கிறது” என்றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் கட்சியின் மாநிலக் கட்​டுப்​பாட்​டுக்​குழு தலைவர் கே.சுப்​பராயன்,முன்னாள் மாநில செயலர் இரா.​முத்​தரசன் பங்​கேற்​றனர். இதே​போல் மார்க்சிஸ்ட் அலு​வல​கத்​தில், அக்​கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் கொடியேற்றி வைத்து கூறும்​போது, “எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் ஆதரவு தெரிவிக்​கும் அதி​முக, பாஜக​வுக்கு ஒரு அடிமை போல் சிக்​கி​விட்​டது. தட்​டிக்​கேட்​கும் நிலை​யில் அதி​முக இல்லை. எஸ்​ஐஆர் ஆபத்து நிறைந்​தது என தெரிந்​தும் பாஜக​வுட​னான கூட்​ட​ணி​யால் அதி​முக அதை எதிர்க்க முடி​யாமல் இருக்​கிறது. எனவே எஸ்​ஐஆரை எதிர்த்து வரும் நவ.11-ம் தேதி மாவட்ட தலைநகரங்​களி​ல் ஆர்ப்​பாட்​டம் நடக்கிறது” என்​றார்​.



By admin