• Mon. Jan 12th, 2026

24×7 Live News

Apdin News

பாஜக குஜராத்தை 7 முறை தொடர்ந்து ஆட்சி செய்தபோதும் சோம்நாத் கோவில் விவகாரம் இன்னும் அதற்குத் தேவையா?

Byadmin

Jan 12, 2026


 பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், @narendramodi

    • எழுதியவர், அர்ஜுன் பர்மர்
    • பதவி, பிபிசி குஜராத்தி

குஜராத்தின் சோம்நாத் கோவில், இந்து மத நம்பிக்கைகளில் புனிதமாகக் கருதப்படும் 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது ஜோதிர்லிங்கமாகும்.

வரலாற்று ரீதியாகவும், இந்து மத ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சோம்நாத் கோவில் குறித்து மீண்டும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சோம்நாத்தில் “சோம்நாத் ஸ்வாபிமான் பர்வ்” நிகழ்வு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார்.

மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் (பிஐபி) கூற்றுப்படி, ஜனவரி 1026-ல் சோம்நாத் கோவில் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நடந்தது.

”அழிவை நினைவு கூர அல்ல, மாறாக நம்பிக்கை, கலாசார சுயமரியாதை மற்றும் மறுபிறப்பின் உணர்வைக் கௌரவிப்பதற்காக இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது” என பிஐபி தெரிவித்துள்ளது.

By admin